Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது போதையில் பெண் போலீஸிடம் தகராறு! – திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (09:08 IST)
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் பெண் காவலரிடம் குடித்துவிட்டு தகராறு செய்த திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வளையம்பட்டி ஐந்தாம் ரோட்டில் காவலர்கள் வாகன பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி காரில் வந்துள்ளார். அவரது காரையும் காவலர்கள் சோதனையிட முயன்றபோது அதை அவர் தடுத்ததுடன் பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தைகளில் திட்டி தகராறு செய்துள்ளார். மேலும் அவர் மது அருந்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments