உங்கள கும்புட்டு கேக்குறேன்; முகக்கவசம் மாட்டுங்க! – அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (08:38 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளையும், கேள்வியையும் எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ”சென்னையை பொறுத்தவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதால்தான் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடிந்துள்ளது. கொரோனா நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்புவது போல அரசியல் செய்ய இது நேரம் அல்ல. மக்கள் நலனை கவனத்தில் கொண்டு உயிரையும் பொருட்படுத்தாமல் பலர் உழைத்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் “கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது மக்கள் கைகளில்தான் உள்ளது, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments