Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வீடியோ! தாய் மீது வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (12:05 IST)
விழுப்புரத்தில் குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்த தாய் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள மணலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த துளசி என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி துளதி தனது குழந்தையை கொடூரமாக தாக்குவதும், அதை தனது செல்போனில் வீடியோ எடுப்பதுமாக இருந்துள்ளார். ஒருநாள் எதேச்சையாக துளசியின் செல்போனை எடுத்து பார்த்த வடிவழகன் குழந்தையை மூர்க்கமாக தாக்கும் வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் குழந்தையை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்ட வடிவழகன் துளசியை ஆந்திராவுக்கே அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் குழந்தையை துளசி அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் துளசியை விசாரணைக்காக ஆந்திராவிலிருந்து அழைத்து வர உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments