Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிஷோர் கே சுவாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! – ஏற்கனவே மூன்று வழக்குகள்!

கிஷோர் கே சுவாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! – ஏற்கனவே மூன்று வழக்குகள்!
, வெள்ளி, 25 ஜூன் 2021 (13:40 IST)
யூட்யூப் பிரபலம் கிஷோர் கே சுவாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அவர் மீது மேலும் குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.

யூட்யூப் பிரபலமான கிஷோர் கே ஸ்வாமி திமுகவை சேர்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், பெண் பத்திரிக்கையாளரை இழிவுப்படுத்தி பேசியதாகவும் தொடுக்கப்பட்ட வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகை ரோகிணியும் தன்னை இழிவாக பேசியதாக கிஷோர் கே சுவாமி மீது புகார் அளித்திருந்தார்.

இவ்வாறாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கிஷோர் கே சுவாமி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

85 நாடுகளை உலுக்கும் டெல்டா வகை கொரோனா! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!