Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

Siva
வியாழன், 16 மே 2024 (11:29 IST)
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் புதிய அதிகாரிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்த அதிகாரிகள் இந்த தனிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் இந்த வழக்கில் துப்பு துலங்காததால்10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 
நெல்லை உள்ளிட்ட 3 மாவட்ட தடய அறிவியல் துறையினர் ஆவணங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர் என்றும், ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
போலீசாரின் இந்த தீவிர நடவடிக்கையை அடுத்து நெல்லை ஜெயக்குமாரை கொலை செய்த மர்ம கும்பல் வெகு சீக்கிரம் பிடிபடும் என்றும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments