Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

Siva
வியாழன், 16 மே 2024 (11:22 IST)
இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜூன் நான்காம் தேதி தேர்தல் ரிசல்ட் பின்னர் ஆவது பங்குச்சந்தை உயருமா என்று முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடன் காத்திருக்கின்றனர். 
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து குறைந்து வருகிறது என்பதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 245 புள்ளிகள் குறைந்து 72 ஆயிரத்து 744 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 87 புள்ளிகள் குறைந்து 22,128 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பெரிய அளவில் சரிவில்லை என்பது ஒரு ஆறுதலாக உள்ளது. 
 
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி,  ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments