Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீசையும் விட்டு வைக்காத ஆன்லைன் சூதாட்டம்! – தூக்கிட்டு தற்கொலை!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (11:40 IST)
திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவதும், அதனால் பணத்தை இழப்பவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருப்பாய்த்துறை பகுதியை சேர்ந்த காவலர் ஆனந்த். வாத்தலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். அதில் பணத்தை இழந்ததால் தனது நண்பர்களிடமும் பணம் கடன் வாங்கி விளையாடி தோற்றதாக கூறப்படுகிறது.

இதனால் தீராத மன உளைச்சல் மற்றும் கடன் சுமைக்கு உள்ளான ஆனந்த் வீட்டிற்கு வந்து சீருடையை கூட மாற்றிக்கொள்ளாமல் நள்ளிரவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments