போலீசையும் விட்டு வைக்காத ஆன்லைன் சூதாட்டம்! – தூக்கிட்டு தற்கொலை!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (11:40 IST)
திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவதும், அதனால் பணத்தை இழப்பவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருப்பாய்த்துறை பகுதியை சேர்ந்த காவலர் ஆனந்த். வாத்தலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். அதில் பணத்தை இழந்ததால் தனது நண்பர்களிடமும் பணம் கடன் வாங்கி விளையாடி தோற்றதாக கூறப்படுகிறது.

இதனால் தீராத மன உளைச்சல் மற்றும் கடன் சுமைக்கு உள்ளான ஆனந்த் வீட்டிற்கு வந்து சீருடையை கூட மாற்றிக்கொள்ளாமல் நள்ளிரவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments