Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை ஊரடங்கிற்கும் அடங்க மாட்டேங்குதே! – 21 லட்சத்தை கடந்த பாதிப்புகள்!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (11:15 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டும் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஜூலை வரை கடுமையாக இருந்த ஊரடங்கு ஆகஸ்டு முதலாக மத்திய அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் ஊரடங்குகள் குறித்த முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 62,538 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகள் 20,27,075 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 43,379 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 14,80,885 பேர் குணமடைந்துள்ளனர். 6,28,747 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments