Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி போராட்டத்தில் மாணவியின் கையை போலீஸ் உடைக்கும் காட்சி!

சென்னை ஐஐடி போராட்டத்தில் மாணவியின் கையை போலீஸ் உடைக்கும் காட்சி!

Webdunia
புதன், 31 மே 2017 (17:29 IST)
மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடைவிதித்ததை அடுத்து நாடுமுழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை ஐஐடியில் உள்ள மாணவர்கள் சிலர் மாட்டிறைச்சி விருந்து வைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


 
 
இதனையடுத்து இந்த மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சூரஜ் என்ற மாணவர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி புரட்சிகர மாணவர்கள் இயக்கம் உள்ளிட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். பெண்கள் என்றும் பாராமல் மணவிகளை போலீசார் தரதரவென இழுத்து குண்டுக்கட்டாக துக்கி சென்று வாகனத்தில் ஏற்றினர். அதில் ஒரு மணவி மயங்கி விழுந்துள்ளார்.

 
மயங்கி விழுந்த மணவியை இரண்டு போலீசார் நெருக்கித் தள்ள பின்னால் இருந்த பெண் போலீஸ் ஒருவர் அந்த மாணவியின் கையை முறிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. மயங்கி விழுந்த பெண்ணை தாங்கி பிடிக்க வேண்டிய போலீசார் அந்த பெண்ணின் கையை உடைக்கும் வீடியோ பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments