Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவை தூங்கவிடாமல் செய்த தந்தையை போட்டு தள்ளிய மகன்

Webdunia
புதன், 31 மே 2017 (17:06 IST)
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்த தந்தையை 17 வயது மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூரிகாமணிமிட்டா கிரமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று இரவு முழுவதும் வீட்டில் உள்ளவர்களை தூங்க விடாமல் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
 
இதனால் இவரது மனைவி மற்றும் மகன் தினமும் பெரும் தொல்லைக்கு ஆளாகி வந்துள்ளனர். சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து வீட்டில் கலாட்டா செய்துள்ளார். பொறுமையை இழந்த 17 வயது மகன் ஆத்திரத்தில் பீர் பாட்டிலை எடுத்து மண்டையில் அடித்துள்ளார். இதில் பன்னீர் செல்வம் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டார்.
 
காவல்துறையினரிடம் அவரது மகன் அவரை யாரோ கொலை செய்தது போல் முதலில் நடித்துள்ளார். பின் தொடர் விசாரணையில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments