Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விசாரணைக்கு சென்ற இளைஞரின் கையைக் கடித்த காவலர்

விசாரணைக்கு சென்ற இளைஞரின் கையைக் கடித்த காவலர்
, வெள்ளி, 29 ஜூலை 2016 (15:55 IST)
ராமநாதபுரத்தில் விசாரணைக்காக இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் அழைத்து சென்று அவரை கடுமையாக தாக்கி கையைக் கடித்ததாக புகார் அளிக்கப்பட்‌டுள்ளது.


 
 
ராமநாதபுரம் மாவட்டம், கொட்டிகுளத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் கார்த்திக் என்பவர். இவர் வழக்கு ஒன்றில் கையெழுத்துப்போட ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.
 
அப்போது, இளைஞர் கார்த்திக்கை, சுரேஷ் என்ற காவலர் விசாரணைக்காக அழைத்து சென்று, விசாரணையின் போது அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் கார்த்திக்கின் கையும் அந்த காவலர் கடித்ததாக கூறப்படுகிறது.
 
இளைஞரை கடித்த காவலர் சுரேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது ‌உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளார். காவலரால் தாக்கப்பட்ட கார்த்திக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போனில் ஆபாச படம்; கண்டித்த இளம்பெண் கொலை; வாலிபர் கைது