Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடி ரெய்டு என தொழிலதிபர்களை ஏமாற்றிய டிரைவர்.. குறி வைத்து பிடித்த போலீசார்..!

Mahendran
வியாழன், 4 ஜூலை 2024 (10:24 IST)
ஐடி ரெய்டு வருவோம் என வருமானவரித்துறை அதிகாரி போல் பேசிய டிரைவர் போலீசாரால் குறி வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரி என கூறி தொழிலதிபர்களிடம் மோசடி செய்து வந்த விக்னேஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை
 
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் ஆக்டிங் ஓட்டுநராக பணி புரிந்த விக்னேஷ்குமார். இவர் வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி பல தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு ஐடி ரெய்டு வரவுள்ளதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் ஐடி ரெய்டு வராது எனவும் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
 
இதே போல் சமீபத்தில் ஒரு தொழிலதிபரை இவர் மிரட்டிய நிலையில் அந்த தொழில் அதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விக்னேஷ்குமாரை குறி வைத்து பிடித்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments