Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழி விலை குறைய காரணம் இவர்தான்! – கைது செய்த போலீஸ்!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (13:38 IST)
கோழிகளுக்கு கொரோனா பரவியிருப்பதாக போலி செய்தியை பரப்பிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கோழிகளில் கொரோனா இருப்பதாக போலி செய்தி ஒன்று வாட்ஸப் மூலமாக வலம் வர தொடங்கியது.

அந்த செய்தியில் சேலம், நாமக்கல் பகுதிகளை சேர்ந்த கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை நம்பி பலர் கோழிகளை உண்பதை தவிர்க்க தொடங்கியதால் தமிழகம் முழுவதுமே கோழி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

போலி செய்தி பரப்பியவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழி பண்ணை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் கரூரை சேர்ந்த பெரியசாமிதான் இதை செய்தவர் என்று கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

கொரோனா பீதியால் கோழி விலை குறைந்துள்ள நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சல் மேலும் கோழி வியாபாரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருப்பதி போல் தமிழக கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments