Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகத்தை தாக்கிய விவகாரம்; இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (15:32 IST)
சென்னையில் அம்மா உணவகத்தை தாக்கிய விவகாரத்தில் இருவரை போலீஸ் கைது செய்துள்ள நிலையில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

சென்னை ஜே ஜே நகரில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று காலை மூவர் அங்கிருந்த பேனர்களை கிழித்ததுடன், அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரகளை செய்தவர்களை கட்சியிலிருந்து நீக்கவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் அம்மா உணவகத்தில் சேதப்படுத்தப்பட்ட பேனர் மீண்டும் வைக்கப்பட்டதுடன், ரகளை செய்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நவசுந்தர், சுரேந்திரன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவான நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments