Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது: சென்னையில் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 2 மே 2024 (15:36 IST)
சென்னையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரிடம் இருந்து 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் காதர் மொய்தீன் அளித்த தகவல் அடிப்படையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த சுல்தான், அலாவுதீன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
 
கைதான இருவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூரை சேர்ந்த ராகுலிடம் போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருவான்மியூரில் உள்ள ராகுலின் வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பின் அவருடைய வீட்டில் சோதனை செய்ததாக தெரிகிறது.
 
மேலும் இதுகுறித்த விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் தான் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments