Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாட்ஸ் அப் மூலம் வழக்கின் விசாரணை விவரங்கள்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்..!

வாட்ஸ் அப் மூலம் வழக்கின் விசாரணை விவரங்கள்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்..!

Siva

, வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:40 IST)
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்கின்,  விசாரணை விவரங்கள் அனைத்தும் அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
 
தற்போதைய டெக்னாலஜி உலகில்  மெயில், வாட்ஸ்அப் மூலம் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதால் நேரம் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல், விரைவாகவும் தகவல்கள் போய் சேருகிறது. இந்த நிலைஇயில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
இதன்படி  உச்ச நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும்  அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் எண்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் உச்சநீதிமன்ற தகவல்தொழில்நுட்பச் சேவையில் வாட்ஸ்ஆப் சேவையும் இணைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ள நிலையில் வழக்கின் விவரங்கள் இனி உடனுக்குடன் வழக்கறிஞர் மூலம் வாதி, பிரதிவாதி தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2ஆம், 3ஆம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு.. உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு