Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமேல் தனித்து தான் போட்டியிடுவோம்: அடம்பிடிக்கும் அன்புமணி

இனிமேல் தனித்து தான் போட்டியிடுவோம்: அடம்பிடிக்கும் அன்புமணி
, வெள்ளி, 20 மே 2016 (16:35 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாமக 2300775 வாக்குகளை பெற்று 5.3 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது.


 
 
எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது பாமக. அதன் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், மாநிலம் முழுவதும் பாமகவுக்கு 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேர் பாமகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
 
மேலும், நாங்கள் அரசியலை மக்கள் சேவையாக செய்து வருகிறோம். ஆனால் திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்கின்றனர். திராவிட கட்சிகள் பண பலத்தினால் தான் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். தோல்விகளால் நாங்கள் துவண்டு போய் விடவில்லை, முன்பை விட வேகமாக பணியாற்றுவோம் என்றார்.
 
வருங்காலங்களிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. பாமக தனித்தே போட்டியிடும் என கூறிய நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது என்றார்.
 
வெற்றி பெற்ற அதிமுக, திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட அன்புமணி, சட்டசபையில் நாங்கள் இடம் பெறாவிட்டாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த வைகோ என்ன செய்தார் தெரியுமா? வெளுத்து வாங்கும் கி.வீரமணி