Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி வரை சஸ்பென்ஸ் வைக்கும் பாமக.. முடிவில் திடீர் மாற்றம்..!

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (12:42 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று வரை அதிமுக கூட்டணியுடன் பாமக இணைவது உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது திடீரென பாஜக கூட்டணியில் இணைய மீண்டும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளிலே மிகவும் குழப்பமான கட்சிகளாக பாமக மற்றும் தேமுதிக இருப்பதாகவும் எந்த கூட்டணியில் இணைவது என்ற ஒரு கொள்கை முடிவு இல்லாமல் யார் அதிக சீட் தருகிறார்கள்? யார் அதிக பணம் தருகிறார்கள் என்ற பேச்சு வார்த்தையில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் தாட்டி வருகின்றனர்.

அதை  போல் தினமும் ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வரும் இரு கட்சிகள் நேற்று வரை அதிமுகவுடன் கிட்டத்தட்ட கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி பாஜக பக்கம் பாமக செல்ல உள்ளதாகவும் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, ஜி கே மணி பங்கேற்று பாஜக கூட்டணியில் இணைவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments