Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 1 ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்: மக்களை ஏமாற்றிய அரசு

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (18:40 IST)
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. 
இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்கமுடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். 
 
நான் முன்பே கூறியது தான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடுத்த போராட்டம்: தேதி அறிவிப்பு..!

வெப்பநிலை இன்று அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கும்பமேளாவின் போது 1000 இந்துக்கள் காணாமல் போனார்கள். அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி தகவல்..!

பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடனே விடுவிப்பு.. இலங்கை கடற்படையின் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments