Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடஒதுக்கீடு என்னாச்சு? அமைச்சர் வீட்டில் பாமக பேச்சுவார்த்தை!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (12:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக பாமக வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக – அதிமுக கூட்டணி அமைக்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் பாமக நிர்வாகிகள் இட ஒதுக்கீடு இல்லாவிட்டாலும் தற்போதைக்கு உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அங்கிளை அங்கிள்னுதானே சொல்ல முடியும்! - விஜய் பேச்சு குறித்து மன்சூர் அலிகான்!

அமலாக்கத்துறை சோதனையின்போது தப்பிக்க முயன்ற எம்.எல்.ஏ.. விரட்டி பிடித்த அதிகாரிகள்..!

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி

கடன் பெற சிபில் ஸ்கோர் அவசியமில்லை: வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்..!

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 10 ஆண்டுகள் வரை சிறை: தமிழக அரசு

அடுத்த கட்டுரையில்
Show comments