Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணி மகளுக்கு இரட்டை குழந்தை: தாத்தாவாக மாறிய இளைஞரணி தலைவர்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (08:32 IST)
ஒரு கட்சியின் இளைஞரணிக்கு தலைவராக இருக்க வேண்டியவர்கள் இளைஞராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 40 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் பலர் இளைஞரணி தலைவராக இருந்துள்ளனர் என்பது தமிழக அரசியலில் சர்வ சாதாரணம்

அந்த வகையில் 49 வயதான அன்புமணி ராமதாஸ் அவர்கள் பாமகவின் இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இளைஞரணி தலைவரான அன்புமணி, இன்று இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவாகி உள்ளார்.

ஆம், அன்புமணியின் மகள் சம்யுக்தா - பிரதீவன் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தை பிறந்தது.  சென்னை தனியார் மருத்துவமனையில் அன்புமணியின் மகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளதாகவும், தாயும், குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவான அன்புமணிக்கு அவரது கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments