மதமாற்றத்தை தடுத்த பாமக நிர்வாகி கொலை: மெளனம் காக்கும் தமிழ் போராளிகள்

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (06:42 IST)
மதவாத கட்சி என்று பாஜக மீது முத்திரை குத்தி வரும் தமிழ்ப்போராளிகள் நேற்று மதமாற்றத்தை தடுத்த பாமக நிர்வாகி ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டதை குறித்து ஒருவார்த்தை கூறாமல் வாய்மூடி மெளனமாக இருப்பதாக நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்

மதமாற்றத்தை தட்டிக்கேட்டதாக நேற்று பாமக நிர்வாகி ராமலிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து ராமதாஸ், தமிழிசை செளந்திரராஜான், எச்.ராஜா தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் கண்டிக்கவில்லை

விமானத்தில் கோஷமிடக்கூடாது என்று கூறிய தமிழிசையை அனைத்து கட்சி தலைவர்களும் கண்டித்த நிலையில் தற்போது ஒரு உயிரே போகியுள்ள நிலையில் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் இருக்கும் போலி தமிழ்ப்போராளிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று டுவிட்டரில் பலர் பொங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கத்தை கொன்றவரை கண்டு பிடிக்க கோரி மறியல் மற்றும் கடை அடைப்பு இன்று நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமலிங்கத்தின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது என்றும், அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் தப்பினார்.. காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments