ரஜினி என்னை நிச்சயமாக கூப்பிட மாட்டார்: திருநாவுக்கரசர்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (21:27 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும் தனது 40 ஆண்டுகால நண்பருமான திருநாவுக்கரசரை சந்தித்து தனது மகளின் திருமண பத்திரிகையை அளித்தார். இதுவொரு குடும்ப நிகழ்ச்சிக்கான சந்திப்பாக இருந்தாலும் இந்த சந்திப்பு நடந்த நேரம் என்பது திருநாவுக்கரசர் கட்சி பதவியை இழந்த நேரம் என்பதால் இந்த சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை தனது பதவியை பிடுங்கியதால் அவர் வேறு கட்சிக்கு தாவக்கூடும் என்றும், குறிப்பாக ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் அவர் இணைவார் என்றும் கூறப்பட்டது. மேலும் ரஜினி அமெரிக்காவில் இருந்தபோது திருநாவுக்கரசரும் அமெரிக்காவில் இருந்ததால் இருவரும் அமெரிக்காவில் ரகசிய சந்திப்பை நடத்தியிருக்கலாம் என்றும் வதந்திகள் கிளம்பின

இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் தனது கட்சியில் சேருமாறு என்னை ரஜினி கூப்பிட மாட்டார் என்றும் அப்படியே ரஜினி கூப்பிட்டாலும் காங்கிரசை விட்டு போகமாட்டேன் என்றும், ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே தனது லட்சியம் என்றும் அந்த லட்சியத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்