Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு! – திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ கைது!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (13:09 IST)
டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கலில் பிரதமர் மோடியின் உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 32 விவசாய சங்கங்களுடன் நேற்று மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், மீண்டும் நாளை பேச்சு வார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது. இதனால் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் திண்டுக்கலில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments