Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் தமிழகத்திற்கு வருவது உறுதி..! – பாஜக பொது செயலாளர் சி.டி.ரவி தகவல்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (13:44 IST)
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவது உறுதி என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 12 அன்று தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். தொடர்ந்து மதுரையில் பாஜகவினர் நடத்தும் “மோடி பொங்கல்” விழாவிலும், புதுச்சேரியில் நடைபெறும் விழா ஒன்றிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி தமிழகம் வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழகத்தில் திட்டமிட்டபடி 12ம் தேதி பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சி நடக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments