Publish Date: Sat, 15 Jan 2022 (10:43 IST)
Updated Date: Sat, 15 Jan 2022 (11:52 IST)
திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் பதிவு.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை, பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன.
கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என கூறி அந்த காணொளியையும் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.