Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் குமரி வருகை திடீர் ரத்து: கருப்புக்கொடி எதிரொலியா?

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (10:48 IST)
பிரதமர் மோடி கடந்த 10ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திருப்பூருக்கு வருகை தந்து மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மோடிக்கு திருப்பூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தபோதிலும் வழக்கம்போல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடிக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார். மேலும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆனது

இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பயணத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி பிரதமர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டதாகவும் அதற்கு பதிலாக அவர் குமரிக்கு வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி வருகை தருவார் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரை அடுத்து கன்னியாகுமரியிலும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவதாக வைகோ அறிவித்திருந்த நிலையில் பிரதமரின் குமரி வருகை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments