12ஆம் வகுப்பு ரிசல்ட்.. விருதுநகர் மாவட்டம் முதலிடம்.. கணிதத்தில் எத்தனை பேர் சதம்?

Webdunia
திங்கள், 8 மே 2023 (10:42 IST)
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் இதில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 
 
12ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்ற முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 
 
 பிளஸ் டூ பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
சென்னையில் 91.40% மாணவர்களும் 96.64 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிளஸ் டூ பொதுத்தேர்வு கணிதத்தில் 690 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அதிகபட்சமாக 6573 மாணவர்கள் கணக்குப்பதிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments