தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (08:09 IST)
தமிழக முழுவதும் பிளஸ் டூ தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பிளஸ் டூ தேர்வு இன்று காலை முதல் தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 35,185 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை 8 லட்சத்து 51,33 பேர் எழுத உள்ளனர் என்பதும் மாணவ மாணவியர் இந்த தேர்வை எந்தவித சிரமமும் இன்றி எழுதுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தை போலவே புதுவையிலும் ன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது, புதுவையில் இந்த தேர்வை 14,670 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்பதும் இதற்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்று பிளஸ் டூ தேர்வு தொடங்க உள்ளதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட அரசியல் பிரபலங்கள் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments