Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (08:09 IST)
தமிழக முழுவதும் பிளஸ் டூ தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பிளஸ் டூ தேர்வு இன்று காலை முதல் தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 35,185 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை 8 லட்சத்து 51,33 பேர் எழுத உள்ளனர் என்பதும் மாணவ மாணவியர் இந்த தேர்வை எந்தவித சிரமமும் இன்றி எழுதுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தை போலவே புதுவையிலும் ன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது, புதுவையில் இந்த தேர்வை 14,670 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர் என்பதும் இதற்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்று பிளஸ் டூ தேர்வு தொடங்க உள்ளதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட அரசியல் பிரபலங்கள் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments