கம்யூனிஸ்டுகளை உலகமே நிராகரித்துவிட்டது.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (08:02 IST)
கம்யூனிஸ்டுகளை உலகமே நிராகரித்துவிட்ட நிலையில் கேரள மக்களும் நிராகரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கேரளா அரசியலில் எதிரெதிராக இருந்த போதும் திரிபுராவில் இரண்டு கட்சிகளும் தேர்தலில் இணைந்து கூட்டாக போட்டியிட்டதாக விமர்சனம் செய்தார். 
 
கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாகவும் அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய தீவிரவாதம் தலைவிரித்தாடியதாகவும் அவர் தெரிவித்தார். 
வாக்கு அரசியலுக்காக காங்கிரஸ் மௌனமாக இருந்ததாகவும் கம்யூனிஸ்டுகளை உலகமே நிராகரித்துவிட்ட நிலையில் கேரளாவும் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments