Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் 100க்கு 138 மதிப்பெண், 600க்கு 514 மதிப்பெண். ஆனால் பெயில்.. யாருப்பா பேப்பர் திருத்தியது..?

Webdunia
புதன், 10 மே 2023 (07:54 IST)
தமிழில் 100 மதிப்பெண்ணுக்கு 138 மதிப்பெண் பெற்றதாகவும் மொத்தம் 514 மதிப்பெண் பெற்ற நிலையில் நான்கு பாடத்தில் தோல்வி என்றும் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு மதிப்பெண் பட்டியல் வந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தனித்தேர்வர் ஆர்த்தி என்பவர் கடந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில் அவர் நேற்று ஆன்லைன் தனது தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரது மதிப்பெண் பட்டியலில் தமிழில் 138 மதிப்பெண், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 56 மதிப்பெண், இயற்பியல் 75 மதிப்பெண், வேதியல் 71 மதிப்பெண், உயர் கணிதம் 82 மதிப்பெண் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அவரது மொத்த மதிப்பெண்கள் 514 என்று இருந்தபோதிலும் அவர் நான்கு பாடங்களில் பெயில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழில் மொத்தமே 100 மதிப்பெண் என்ற நிலையில் 138 மதிப்பெண் எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கல்வி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது ஆன்லைனில் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பில் தவறு நிகழ்ந்துள்ளதாகவும் விரைவில் சரி செய்து அவரது உண்மையான மதிப்பெண் பட்டியலை தருவதாகவும் கூறியுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பில் மெத்தனமாக இருந்ததை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments