Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை! என்ன காரணம்?

Advertiesment
NIA1
, செவ்வாய், 9 மே 2023 (07:38 IST)
நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்திவரும் நிலையில் இன்று காலை முதல் தமிழ்நாட்டில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய பத்து இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை மதுரை திருச்சியை தேனி உள்ளிட்ட நகரங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இணைப்பு குறித்து ஜெயக்குமார் கிண்டல்..!