Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகம்?

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (11:15 IST)
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் பிளஸ் 1 தேர்வு முடிவுகள்  சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் வெளியானது.
 
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை 8,11,172 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், தேர்ச்சி சதவீதம் 91.71 என அறிவ்க்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் 4.04 லட்சம் பேரும் மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
மேலும் அரசு பள்ளிகள் 85.75 சதவீத தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீத தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.09 சதவீத தேர்ச்சியும்  பெற்றுள்ளன.  11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை மாவட்டம்  96.02 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.   
 
ஈரோடு, திருப்பூர், விருதுநகர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments