Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகம்?

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (11:15 IST)
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் பிளஸ் 1 தேர்வு முடிவுகள்  சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் வெளியானது.
 
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை 8,11,172 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், தேர்ச்சி சதவீதம் 91.71 என அறிவ்க்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் 4.04 லட்சம் பேரும் மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
மேலும் அரசு பள்ளிகள் 85.75 சதவீத தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீத தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.09 சதவீத தேர்ச்சியும்  பெற்றுள்ளன.  11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை மாவட்டம்  96.02 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.   
 
ஈரோடு, திருப்பூர், விருதுநகர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments