Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி: மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (09:33 IST)
சென்னையில் அரசு பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் போக்குவரத்து சங்கங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் என்ற முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பல அரசியல் விமர்சகர்கள் இந்த முடிவை வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
போக்குவரத்து கழகங்கள் அடிக்கடி திடீர் திடீரென வேலை நிறுத்தம் செய்வதை அடுத்து தனியாருக்கு போக்குவரத்து பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தால் வேலை நிறுத்தங்கள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் அதன் பின் படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments