Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !

பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
, புதன், 3 மார்ச் 2021 (23:32 IST)
என்றுமில்லாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்கள் விலை உயரவுள்ளதாக அபாயம் இருந்தது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளின் வாடகைகளும் சுமார் 30% வரை உயர்த்தப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதமே இதுகுறித்த போஸ்டர்கள் வைரலான நிலையில் மீண்டும் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், வரும் மார்ச் மாதம் முதல் பெரிய குடத்திற்கு ரூ.13, சிறிய குடம் ரூ.8, கைக்குடம் ரூ.4  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக வினரின்தோல்வி பயமே இதற்கு காரணம் -அரவக்குறிச்சி தொகுதி மக்கள் பேச்சு