அதிமுகவின் இரண்டு அணிகளாக இருந்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டாலும் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது தினகரன் அணி. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரன் அணிக்கு சாதகமாக வந்துவிட்டால் ஈபிஎஸ் ஆட்சி கவிழும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
முதல்வர் மீதே 1500 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பெரும் பரபரப்பை தினகரன் அணியினர் ஏற்படுத்தி வருவதால் அதிமுகவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் கொத்தன் தெருவில் தினகரன் ஆதரவாளர்கள் 2 பேர் வீடுகள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலும் விபரீதம் நடக்காமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!