Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் ஆதரவாளர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (09:02 IST)
அதிமுகவின் இரண்டு அணிகளாக இருந்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டாலும் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது தினகரன் அணி. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரன் அணிக்கு சாதகமாக  வந்துவிட்டால் ஈபிஎஸ் ஆட்சி கவிழும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

முதல்வர் மீதே 1500 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பெரும் பரபரப்பை தினகரன் அணியினர் ஏற்படுத்தி வருவதால் அதிமுகவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் கொத்தன் தெருவில் தினகரன் ஆதரவாளர்கள் 2 பேர் வீடுகள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலும் விபரீதம் நடக்காமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments