Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: பாஜகவுக்கு வெற்றி கிடைக்குமா?

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (08:43 IST)
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களிலும் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண தொடங்கிவிட்டன.

மேகாலாயாவில் 59 தொகுதிகளுக்கும், திரிபுராவில் 59 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த மூன்று மாநிலங்களில் இருந்து வெளிவந்துள்ள முதல்கட்ட முடிவில் மேகாலாயாவில் காங்கிரஸ் ஒரு இடத்திலும், திரிபுராவில் மார்க்கிஸ் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தலா 5 இடங்களிலும், நாகலாந்தில் பாஜக ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது.

பாஜக இதுவரை 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. இதில் 9 மாநிலங்களில் கூட்டணி கட்சி ஆட்சி உள்ள நிலையில் தற்போதைய மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தால் 22 மாநிலங்களில் ஆட்சி செய்து சாதனை படைக்கும். இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக ஆட்சி கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் விரிவடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments