Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளைவுட் கடைகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (13:38 IST)
மேட்டுப்பாளையம் மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.


கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் நேற்றிரவு மதன்குமார், சச்சின் உள்ளிட்ட இருவருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளை பணி முடிந்து மூடி விட்டு சென்றுள்ளனர்.

பின்னர் இன்று காலை கடைக்கு வந்த பணியாளர்கள் கடைகளின் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்ற பணியாளர்கள் அங்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் வெளியே நின்றவாறு  உள்ளே பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் திரியை வைத்து தூக்கி வீசியுள்ளனர் என்பதை அறிந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை சில பிளைவுட்களும் எரிந்துள்ளன. பிரதான சாலையில் நடைபெற்ற இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments