Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறாத பெட்ரோல் & டீசல் விலை... அதிகம் என்றாலும் மகிழ்ச்சி தான்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (08:43 IST)
சென்னையில் தொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102-ஐ கடந்துவிட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே விலையில் இருந்ததால் சென்னையிலும் விலை உயரவில்லை என்று குறிப்பிட்டு தெரிந்தன. 
 
இதனிடையே 14வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.49,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments