Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்ஜெட் நாளில் பெட்ரோல் விலை உயர்வா?

பட்ஜெட் நாளில் பெட்ரோல் விலை உயர்வா?
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (07:30 IST)
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா அல்லது இறங்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் 89வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 எனவும் சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு!