Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.35 உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (07:57 IST)
பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.35 உயர்ந்துள்ளதை அடுத்து அந் நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் இலங்கை போல் அந்நாடும் திவால் ஆகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.35 உயர்ந்து என்ற 249.80 விலையிலும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 18 ரூபாய் உயர்ந்து 262.80 என்ற விலையிலும் விற்பனை ஆகிவிடுகிறது.
 
பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் நிலையில் அந்நாட்டின் நிதி அமைச்சர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 
 
இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63 எனவும் சென்னையில் இருந்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments