Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

106 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்ந்ததா?

Petrol
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (07:15 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 106 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 107 ஆவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.3 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் கடந்த 107 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்றாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப சென்னையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

61.02 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!