Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்வா? அதிர்ச்சி தகவல்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்வா? அதிர்ச்சி தகவல்
, வெள்ளி, 4 மார்ச் 2022 (07:29 IST)
கடந்த சில வாரங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த போதிலும் இந்தியாவில் மட்டும் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை 
 
இந்த நிலையில் வரும் 7ம் தேதியுடன் தேர்தல் முடிவடைவதை அடுத்து எட்டாம் தேதி முதல் 25 ரூபாய் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இருப்பினும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

44.19 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!