Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி!

2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி!
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (07:41 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது என்பதும் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முப்பது காசுகளுக்கு மேல் உயர்ந்து வருவதால் பெட்ரோல் விலை 105 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் முந்தையநாள் விலையிலேயே சென்னையில் விற்பனை ஆகி கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதே போல் இன்றும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயரவில்லை என சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் இன்றும் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
 
கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.104.52
 
சென்னையில் இன்று டீசல் விலை ரூ.100.59
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யன்கானை விடுவிக்க கோடிக்கணக்கில் பணபேரமா? பெரும் பரபரப்பு