Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்முறையாக 100 ரூபாயை தாண்டிய டீசல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

முதல்முறையாக 100 ரூபாயை தாண்டிய டீசல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!
, வியாழன், 21 அக்டோபர் 2021 (07:37 IST)
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொண்டு வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழக வரலாற்றில் முதல் முறையாக டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் பெட்ரோல் விலை 30 உயர்ந்துள்ளதூ. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.61 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 99.59 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி