Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.103ஐ நோக்கி செல்லும் பெட்ரோல்: இன்றும் விலையுயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

ரூ.103ஐ நோக்கி செல்லும் பெட்ரோல்: இன்றும் விலையுயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி
, வெள்ளி, 15 அக்டோபர் 2021 (06:49 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை 102 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதுவும் பெட்ரோல் விலை 30 காசுகளும் டீசல் விலை 33 காசுகளும் என மிக அதிகமாக உயர்ந்து கொண்டு வருவது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.40 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.98.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24.35 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!