Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன ஓட்டிகளுக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கும் பெட்ரோல் விலை!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (09:45 IST)
தொடர்ந்து 12 ஆம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
மே 4 முதல் அமலுக்கு வந்த இந்த வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 46 காசு உயர்ந்து லிட்டர் ரூ.81.32க்கும், டீசல் 54 காசு உயர்ந்து லிட்டர் ரூ.74.23க்கும் விற்பனை ஆகிறது. 
 
கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.01 உயர்த்தப்பட்டுள்ளது என்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments