Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளுக்கு உணவு வழங்க அனுமதி – சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (21:07 IST)
தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க தமிழக அரசு நேற்று தடை விதித்திருந்த நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ஆன்ணையர், ஏழைகளுக்கு உணவு வழங்க விரும்புவோர் 24 மணி நேரத்திற்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளதாவது :

சென்னையில் ஏழைகளுக்கு உணவு வழங்க விரும்புவோர் 24 மணி நேரத்திற்கு முன்பு அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

 சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அலுவலர்கள் முன்னிலையில் தான் உணவு, மளிகை, மருந்துகளை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு, உணவு வழங்கும்போது எந்த ஒரு அமைப்பு, அரசியல் கட்சி என எந்த விளம்பரத்தையும் பயன்படுத்த கூடாது என அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் வீட்டைவிட்டு வெளியேறினால் கட்டாயன் மாஸ்க் அணிந்துதான் செல்லவேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments