Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா தொற்று: இன்று முதலிடம் பிடித்த திருப்பூர்

தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா தொற்று: இன்று முதலிடம் பிடித்த திருப்பூர்
, திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:46 IST)
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 பேர்களில் திருப்பூர் மாவட்டத்தினர் மட்டும் 18 பேர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கரூரில் 15 பேர்களும் மதுரையில் 14 பேர்களும், சென்னையில் 9 பேர்களும், கோவையில் 7 பேர்களும், விருதுநகரில் 6 பேர்களும், நாகையில் 5 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சென்னையில் 208 பேர்களும், கோவையில் 120 பேர்களும், திருப்பூரில் 78 பேர்களும், ஈரோட்டில் 64 பேர்களும், திண்டுக்கல் மற்றும் நெல்லையில் தலா 55 பேர்களும், நாமக்கல் மற்றும் செங்கல்பட்டில் 45 பேர்களும், திருச்சியில் 43 பேர்களும், தேனியில் 41 பேர்களும், கரூரில் 40 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் மிகவும் குறைவாக பெரம்பலூர் மற்றும் அரியலூரில் தலா ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சியில் 3 பேர்களும், ராமநாதபுரம் மற்றும் தென்காசியில் தலா 5 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா , மொத்தம் 1173 பேர் பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர்