விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: சேலத்தில் டிச. 4ல் நடக்கவிருந்த தவெக கூட்டம் ரத்து!

Mahendran
வியாழன், 20 நவம்பர் 2025 (15:48 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், டிசம்பர் 4-ஆம் தேதி சேலத்தில் நடத்த திட்டமிட்டிருந்த பிரசார பொதுக்கூட்டத்திற்குச் சேலம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
 
டிசம்பர் 3-ஆம் தேதி கார்த்திகை தீபம் பண்டிகை வருவதால், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் சேலம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
 
மேலும் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட வேண்டும்.
 
இந்த காரணங்களால் டிசம்பர் 4-ஆம் தேதி பிரசார கூட்டத்திற்குப் போதுமான பாதுகாப்பு வழங்க இயலாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை தொடர்ந்து, பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தவெக தற்போது மற்றொரு மாற்று தேதியை கோரி மனு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் 10வது முறையாக முதலமைச்சர் ஆனார் நிதீஷ் குமார் : 2 துணை முதல்வர்கள் யார் யார்?

மீண்டும் மக்களை சந்திக்க வரும் விஜய்!.. இந்த முறை வேற மாறி!..

டொனால்ட் டிரம்ப் மகன் தாஜ்மஹால் வருகை.. ஆக்ராவில் 200 போலீசார் பாதுகாப்பு..!

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments